பசு மாடு விட்ட கண்ணீர்

ஊரு விட்டு போறவரே
ஒரு நிமிஷம் நில்லுங்க!!

காடுகரை செத்ததுன்னு
ஊரைவிட்டு போறிங்களே..!

நீங்க பெத்த பிள்ளைகளை
வெளிநாட்டுக்கு அனுப்பிட்டிங்க !

உங்களை கரைசேர்க்க பட்டதுன்பதிற்கு
கறிக்கடையில் வித்துட்டிங்க !

உங்க பிள்ளை வளரத்தானே
எம்பிள்ளை கட்டிபோட்டு பாலையும் கறந்திங்க!

பசுமையை போசிக்குபுட்டு
பறந்தும் தான் போவிங்க...!

யாருபெத்த பிள்ளை நாங்க
மறந்தும் தான் போனதிப்போ...!

கால்நடையாய் பிறந்ததுக்கு
கண்ணீர் மட்டும் மிச்சமுங்க !

கூரு போட்டு என்னுடலை
ஊருக்கெல்லாம் தானம் தந்து

ஊரைவிட்டு போவதற்கு
விருந்துன்னு வைப்பிங்க...!

ஆறறிவு மனிதா எனக்கு
ஆதரவாய் யாருமில்லை போடா !!

நாளை உனக்கும் அந்த நிலை
வந்திடாதா பொறுத்திருந்து பாருடா !!

எழுதியவர் : கனகரத்தினம் (29-Mar-14, 5:35 pm)
பார்வை : 109

மேலே