சம சக்கரம்
நேருக்காக போர் தொடுப்பதில்
நியாயமில்லை பெண்ணே -நீ
நெஞ்சிலேந்திய கணவன் உன்
காலடியில் தான் கண்ணே !
இரண்டும் இணைந்து இயங்கித்தானே
சக்கரம் வண்டியை வழி நடத்தும்
இரண்டி லொன்று கழண்டு போனால்
வாழ்க்கைப் பயணம் நின்று போகும் !
கூரையை பிய்த்து கொடியை நட்டால்
யாருக்கு லாபம் ,யாருக்கு நட்டம் ?
தேரையாய் நீயும் கல்லுக்குள் வேண்டாம்
தேவதை நீயாய் கணவான் நெஞ்சில் !
உன் கையிலிருக்கும் ரேகை
உலகப் படத்தி லில்லையடி
உண்மை, இதை உணர்ந்தால் உனக்கு
துன்ப மேதும் இல்லையடி !