வாழ்க்கை யார் கையில்

ஊடுருவிப் பறக்கின்றேன்
விண்ணில் அங்குமிங்கும்
மீண்டும் சாய்கிறேன்
மண்ணில் ..! பட்டம்

விதைக்கின்றேன்
நேரம் பார்த்து விதைகள்
மழை வருமென்று...! பாலைவனம்

பறிக்கவில்லை
தினமும் கோவைப் பூக்கள் அழகாக
என் வீட்டு தோட்டத்தில் மட்டும் ...! கிளிகள்

தினம் காத்து இருக்கிறேன்
வானில் வலை வீசி
உன்னை என்னில் தாலாட்ட ...! தென்றல்

எழுதிக் கிழிக்கிறது
காகிதம் தான் என்று
காந்தி தாளில்
மொட்டுக்கள் அன்பாய்...! குழந்தை

எழுதியவர் : ஜெயராஜரெத்தினம் (3-Apr-14, 3:45 pm)
பார்வை : 111

மேலே