கவிதைகள்

கவிதைகள்,
காலம் எழுதும் குறிப்பு !
எழுத்தென்னும் பூவின் சிரிப்பு !
கற்பனை ஆடும் களம் !
விற்பனை ஆகா நிலம் !
தாய்மொழி தமிழின் நகை !
காய் கனி மலர் வகை !
தொடத் தொட மலரும் மலர் !
சுடச் சுட செய்யும் சிலை !
நோட்டுப் புத்தகத்தின் நாணம் !
நாட்டைத் திருத்திடும் பாணம் !
தனிமைக் குழந்தையின் பொம்மை !
இனிமை சொரிந்திடும் உண்மை !
கரையில் அலைஎழுதும் காவியம் !
நுரையில் காற்றேழுதும் ஓவியம் !
காதல் வளர்க்கும் தூதன் !
மோதல் தடுக்கும் பூதம் !
மனதை ஈர்க்கும் விசை !
பேனா முனையின் பசை !
அழகு ரசத்தின் சாறு !
முடிவிலும் சிறக்கும் வேர் !
கவிதைகள் !
-விவேக்பாரதி