அழாதே ஈழமே

யுத்தம் முடிந்து
தமிழனத்தை தரம்பார்க்க
வருகிறது
தறுதலைகள்.............!

வெற்றி
பெற்றோம் இனியெல்லாம்
நாம் வைத்த
சட்டம் எங்கள்
கையில் மட்டும்.........!

கொக்கரிக்கும்
கோழிகளே நீங்களும்
ஒருநாள்
முட்டையிடுவீர்கள்
விடுதலை தமிழினம்
விடுதலை என்று............!

கண்ணுக்கு
தெரிந்த தமிழர்கள்
புலிகளா சிறுத்தைகளா
உங்களுக்கு..............!

அரண்டவன்
கண்களுக்கு
இருண்டதெல்லாம்
பேய்கள்
தான் உங்களுக்கு..........!

இந்த பிஞ்சு
முகம் உனக்கு என்ன
செய்தது...........!

பிறர் வலி
பெரிதாக தெரிந்திடுமா........!

உனக்கு
வலி தெரியும் வரை..........!

எழுதியவர் : லெத்தீப் (12-Apr-14, 11:13 am)
Tanglish : alathe iilame
பார்வை : 99

மேலே