அந்தி மாலை பெய்த மழை

மழை பெய்து ஓய்ந்து
இருந்த அந்த
அழகான அந்தி மாலை
பொழுது சாயும் நேரம்

ஆங்காங்கே குளித்து முடிந்து
தலைதுவட்ட மறந்த அம்
மரத்தின் பச்சைப்பசேலெனும்
பச்சை வண்ண இலைகள்

மெல்லமாய் தட்டிசெல்லும்
தென்றலாய் கூடவே
இதமான சாறல்கள் என்
மனைதை கொள்ளை கொள்ள

இலேசாக இமைகள் மூடவே
இதமான நினைவுகள் எல்லாம்
இமை திறக்காமலே என்
இரு விழிகளையும் நனைக்கிறது..

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (19-Apr-14, 4:34 pm)
பார்வை : 1096

மேலே