மனைவிக்குக் கடிதம்

இளம் மனைவிக்குக் கணவர் பாரதி கடிதம், 1901

ஓம்

ஸ்ரீ காசி
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரிங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நன் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்
சி.சுப்பிரமணிய பாரதி

எழுதியவர் : பாரதியார் (20-Apr-14, 9:41 am)
சேர்த்தது : இஸ்மாயில் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 235

மேலே