புதுமைக் கடல்

அருகருகே அமைந்த
கரை தெரியும்
அழகிய இருகடல்கள்.
அதில் மிதக்கும்
இரு கரு நிலவுகள் !
வெளிச் செல்லும்
வழி தெரியாது
தவிப்பதுபோல்
சுற்றிச் சுற்றி வரும்.
எனைக் கண்டதும்
மூடி மோகிக்கும்
அன்புக் காதலியின்
வேல்விழிகள் தாம் அவை!

எழுதியவர் : நேத்ரா (20-Apr-14, 11:42 am)
பார்வை : 93

மேலே