தண்ணீர் யுத்தம்

*
குடிநீரின்றித் தவித்தனர்
சுவாமி தரிசனம் முடித்தவர்கள்
பௌர்ணமி இரவு.
*
சேவை நிறுவனம் அமைத்தத்
தண்ணீர் பந்தலில் நீரின்றி
காலியாக இருக்கிறது பானைகள்.
*
எப்பொழுது வரும் என்று
விழித்திருந்தார்கள் ?
மாநகராட்சி குடிநீர் லாரி.
*
குடிநீர் வருவதில்லை
வருடந் தோறும் தண்டம்
குழாய் இணைப்பு வரி்
*
இப்பொழுது நடப்பது
அணு ஆயுத யுத்தமல்ல
குடி தண்ணீர் யுத்தம்.
***

எழுதியவர் : ந.க.துறைவன் (21-Apr-14, 3:11 pm)
சேர்த்தது : துறைவன்
Tanglish : thanneer yutham
பார்வை : 142

மேலே