ஏமாளிப் போராளி
நானொரு தொழிலாளி
நலந்தரப் பொறுப்பாளி
நானிலம் சீருயர
நனைந்திடும் பணியாளி !
பேச்சில் ஊக்குவிக்கப்
பெரியோ ரருகுண்டு
பெரும்பே ரதுபோதும்
பெறுங்கணக் கேனிங்கு.
பகலாய் இரவாகும்
பணியின் தரமுயர
பாராட் டுப்போதும்
பலநாள் பணியுயர.
நால்வர் குடியுயர
நானோ கடனாளி
நா நயம் நிசமென்னும்
நாணயப் பாட்டளி !
வார்த்தை வாழ்த்துக்களால்
வளங்கள் உயருமென
வர்த்தக உலகியலில்
வாழ்கைப் போராளி !
.....மீ.மணிகண்டன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
