பிரிவு புதுக்கவிதை

*
ஒரு தொட்டியில்
இரு செடிகள்
பூத்துக் குலுங்கி
இணைந்திருந்தது.
யார் கண்பட்டதோ?
ஒரு நாள் பார்த்த போது
தனித்தனி தொட்டிகளில்
பிரித்துத் தள்ளி
வைக்கப்பட்டிருந்தது.
சில நாட்களில்,
அதற்கென்ன
வருத்தமோ துவண்டு
வாடி வதங்கிப்
பட்டுப் போய்விட்டது
அந்தப்
அழகானப் பூச்செடிகள்
***.

எழுதியவர் : ந.க.துறைவன் (2-May-14, 8:35 am)
பார்வை : 110

மேலே