தமிழ்நாட்டு பருவங்கள் -ஹைக்கூ கவிதை

தமிழ்நாட்டு பருவங்கள் -ஹைக்கூ
---------------------------------------------------

1. இளவேனிற்
------------------

குயில்கள் வசந்தம் பாடிட

தென்றல் தெம்மாங்கு வீச

மலர்கள் எல்லாம் மணம் பரப்ப

வந்தது இளவேனிர்க் காலம்

2. முது வேனிற் காலம்
--------------------------------

எங்கும் ஈரமில்லா சுடு மண்

நெருப்பாய் வீசும் பகல் காற்று

பூவோடு வேம்பும் காயொடு மாவும்

பறவையும் பறக்கா பகல் வேளை

வேதனைத் தரும் முது வேனிற்



3. கார்க் காலம்
-------------------

கார்மேகம் சதுராடும் வானம்

வங்கக் கடலில் காற்றழுத்தம்

பேயுது எங்கும் பேய் மழை

மண்ணும் நனையுது சேறாகுது

இது கார்க் காலம்


4. கூதிர்க் காலம்
---------------------

வறட்டு காற்று வீசுது

இலைகள் அற்று போகும் மரங்கள்

தெருவெல்லாம் காய்ந்த இலைகள்

கூதிர்க் காலம் இது

5. முன் பனி
--------------

சில்லென்று வீசும் பனிக் காற்று

வீதியில் சால்வைப் போர்த்திய மக்கள்

பனியிலும் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

சூடான வெண்பொங்கல் பிரசாதம்

முன்பனி காலமிது

6. பின் பனி காலம்
------------------------

விண்ணிலும் மண்ணிலும் பனி மூடம்

மரம் செடி கொடிகளில் பனித்துளி

பழயன கழிந்து புதியன வருகை

சிவராத்திரி நோக்கி மக்கள்

இது பின் பனி காலம்
---------------------------------------------------------------------------

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (2-May-14, 9:31 am)
பார்வை : 164

மேலே