தமிழ்நாட்டு பருவங்கள் -ஹைக்கூ கவிதை
தமிழ்நாட்டு பருவங்கள் -ஹைக்கூ
---------------------------------------------------
1. இளவேனிற்
------------------
குயில்கள் வசந்தம் பாடிட
தென்றல் தெம்மாங்கு வீச
மலர்கள் எல்லாம் மணம் பரப்ப
வந்தது இளவேனிர்க் காலம்
2. முது வேனிற் காலம்
--------------------------------
எங்கும் ஈரமில்லா சுடு மண்
நெருப்பாய் வீசும் பகல் காற்று
பூவோடு வேம்பும் காயொடு மாவும்
பறவையும் பறக்கா பகல் வேளை
வேதனைத் தரும் முது வேனிற்
3. கார்க் காலம்
-------------------
கார்மேகம் சதுராடும் வானம்
வங்கக் கடலில் காற்றழுத்தம்
பேயுது எங்கும் பேய் மழை
மண்ணும் நனையுது சேறாகுது
இது கார்க் காலம்
4. கூதிர்க் காலம்
---------------------
வறட்டு காற்று வீசுது
இலைகள் அற்று போகும் மரங்கள்
தெருவெல்லாம் காய்ந்த இலைகள்
கூதிர்க் காலம் இது
5. முன் பனி
--------------
சில்லென்று வீசும் பனிக் காற்று
வீதியில் சால்வைப் போர்த்திய மக்கள்
பனியிலும் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
சூடான வெண்பொங்கல் பிரசாதம்
முன்பனி காலமிது
6. பின் பனி காலம்
------------------------
விண்ணிலும் மண்ணிலும் பனி மூடம்
மரம் செடி கொடிகளில் பனித்துளி
பழயன கழிந்து புதியன வருகை
சிவராத்திரி நோக்கி மக்கள்
இது பின் பனி காலம்
---------------------------------------------------------------------------