கருணைக்கொலை
(புற்று நோயால் அவதியுறும் ஒருவரின் ஆழ்ந்த உணர்வுகள் )
"ஆன்கொன்" வைரசின்
ஆக்கிரமிப்பால்
அணு அணுவாய் சிதைகின்றோம் !
கதிர்வீச்சின் தாக்கம்
காயத்தை உலுக்குகின்றது
கர்ம வினையோ !
காலத்தின் கட்டாயமோ !
இறப்பின் உறுதியை
அறிந்ததால்
வலிகளிருந்து விடுதலை பெற
வேண்டுகோள்
எங்களை கருணை கொலை
செய்து விடுங்கள் !!
விரோதிக்கும் இந்த
நிலை வரக்கூடாது
மரணமும் ஒரு வாழ்க்கை தான்
முடிவில் ஏற்படும் நிகழ்ச்சியை
முன்னதாக்கி விடுங்கள் ...
நடை பிணமாக
வலிகளால் வேதனைகளால்
வாழ முடியாமல் சிதையும்
எங்கள் நலத்திற்காக
எங்களை
கருணை கொலை செய்து விடுங்கள்
தயவு செய்து ..... .......