நூலறுந்த காத்தாடி நான் 555

பெண்ணே...

நினைக்க விரும்பாத உன்னை
என்னில் நினைத்தேன்...

என் காதலை ஏற்க்க கூட
காக்கவைத்தாய்...

கைபேசியில் உன்னை
அழைத்தால்...

கைபேசியிலும் என்னை
காக்கவைத்தாய்...

காரணம் கேட்டால்...

நீ கசக்கிய காகிதாமாய்
தூக்கி எறிந்தாய்...

நீ எரிந்தது காகிதமல்ல
என் காதல் கொண்ட இதயமடி...

விரும்பாத உன்னை
கட்டாயபடுத்தியது...

என் தவறுதான்...

நீ எறிந்துவிட்டாய்...

நீ எறிந்த காகிதம் நாளை
காத்தாடியாய் பறக்கும்...

அன்று தலை உயர்த்தி
பார்ப்பாயா என்னை...

நூலறுந்த காத்தாடியாய்
நான் செல்வேன்...

சேரும் இடம்
தெரியாமல்...

உயிரே என்னை
இனி தொடராதே...

என் பாதை
தெரியாமலே நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-May-14, 4:22 pm)
பார்வை : 289

மேலே