விதி

வாழ்க்கை எமதெனும் போதும்
வாழ்வது நீ காட்டும் வெளிச்சத்தில் தான். .
நேசத்தை காட்டி நேர்மையை நொருக்கிடும்
நெளிவு சுளிவுகள் கற்றவன் நீ. .
இருட்டினில் இதயம் பதைபதைக்க விட்டுபின்
இரவென்றால் பகல் உண்டென இலக்கணம் சொல்வாய். . .
அழகெல்லாம் முன் அடுக்கி ஆசை தந்து
அடைவதற்கு வழியடைத்து அழவும் செய்வாய். . .
தூரத்தில் துயிலை துரத்திவிட்டாய்
துன்பத்தை கண்களில் தூவுகின்றாய். .
காலம் கலைத்துக்
குலவிடும் இக்கூத்தினிலே. .
எள்ளலும் இகழ்ச்சியும் தாங்கிட
இரும்பினும் இருகிய இதயமுண்டு. .
துயரம் எல்லாம் தூக்கிசுமக்க
தோழமை தந்த தோள் உண்டு. . .
எத்தனையோ ஏமாற்றம் பெற்றும்
எழுந்திடும் துணிவை இழந்திடவில்லை. . .
பித்தர்போல் உன்னையே பின்தொடர்ந்தோம்
உன் பாதை முடிகையில் பிணங்கலானோம் . .
எனை எத்தனை முறை எரித்தாலும்
ஏற்றிடுவேன் என் விதியே. .
எரிந்து முடித்த ஈமக்கரியில்
உனை மாற்றி எழுதிட முனைதிடுவேன். . .