ஊடல் - 2

இமைகள் சேர்கையில் தூக்கம் வரும்,
ஆனால், பிரியும்போதோ பார்வை தரும்;
காதல் சேர்கையில் இன்பம் பெருகும்,
ஆனால் காதலில் ஊடலோ, அந்தக்காதலைப் பெருக்கும்.

அந்த இமைகள் போல சேர்ந்தே இருக்கவா
இல்லை பிரிந்தும் சேர்ந்தும் இன்பம் பெருக்கவா?
காதலில் ஊடல் ஒரு புரியாத புதிர்தான்,
ஆனால், ஊடலில் காதல் என்றும் பிரியாத உயிர்தான்.

எழுதியவர் : வீரா ஜெயசீலன் (13-May-14, 2:02 am)
சேர்த்தது : veeraa
பார்வை : 85

மேலே