ஜாதகம்
ஜாதகம்...
இன்று மனிதர்கள்
சாதகமாக ஆக்கிவிட்டார்கள்..
அன்று
ஆண்டவன்
இவ்வுலகில் தாய்
ஈன்றெடுக்க
உன்னத நாளை
ஊருக்கு சொல்வான். ஆனால்
என்ன மாயமோ
ஏனோ இந்த மனிதர்
ஐயம் கொண்டு
ஒரு சோதிடர் சொல் கேட்டு
ஓர் நாளோ அதற்க்கு
முன்போ அறுவை செய்து
குழந்தையை
பிறக்க செய்து விட்டார்...
ஜாதகத்தை சாதகமாய்
மாற்றிவிட்டார்....
அவருக்கு தெரியாது
குழந்தையின் ஜாதகம்
ஆண்டவன் கணிப்பில்
கரு உருவான போது.....
ஜோதிட உலக்குக்கே
இது புரியாத உண்மை...
i