+எனக்காய் தான் பிறந்து வந்தாயோ+

நேத்து வச்ச மீன்குழம்பின் வாசம்
அது சொல்லுதடி உன்னோட நேசம்

இன்று பூத்த மல்லிகையின் வாசம்
அது கூட உன்பாசம் பேசும்

நாளை வரும் சூரியனின் ஒளியாய்
நீ எனக்கு தெரிகிறாய் வழியாய்

என் வாழ்வின் நம்பிக்கையும் நீயோ
எனக்காய் தான் பிறந்து வந்தாயோ...!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-May-14, 5:28 pm)
பார்வை : 220

மேலே