என்னவள்

கானகமாடும் மயில் கண்டேன்;
கானம் பாடும் குயில் கண்டேன்;
பிள்ளைமொழி பேசக் கண்டேன்;
குளிர்தரும் நிலவு கண்டேன்;
பரிவுகாட்டும் அன்னை கண்டேன்;
இத்தனையும் ஒத்திருக்கும் அவளிடமின்றி,
வேறிடம் கண்டதில்லை. --இனி
காணப்போவதுமில்லை.

எழுதியவர் : பசப்பி (23-May-14, 11:07 am)
சேர்த்தது : பசப்பி
பார்வை : 104

மேலே