ஓடி போனவள் திரும்பினால்
ஒரு பொண்ணு வீட்ட விட்டு தன்னோட காதலனோட ஓடி போயிட்டா, வீடே சோகத்தில மூழ்கிடுச்சு. எல்லாரும் அவங்கள ஒரு மாதிரியா பேசுனாங்க. இரண்டு நாள் கழிச்சு அந்த பொண்ணு திரும்பி வந்துச்சு, வீட்ல இருக்குறவங்க எல்லாரும் வாய்க்கு வந்த படி அந்த பொண்ண திட்டினாங்க,
அப்பா: எங்கே வந்தே ? எங்க மானத்த வாங்கிட்டு இப்போ உயிரோட இருக்காங்களா இல்லையான்னு பாக்க வந்தியா ?
அம்மா: ஏண்டி இப்டி பண்ணின ? நாங்க உனக்கு என்னடி குறை வச்சோம் ? இப்போ உனக்கு என்ன வேணும் ?
அண்ணன்: ஏய் சனியனே ? என் இங்க வந்து எங்கள தொல்ல பண்ற ? உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, இனி இந்த வீட்ல இருந்து என்ன வேணும் உனக்கு ?
அந்த பெண் வாய் திறந்து பின்வருமாறு பேசினாள்....
நோக்கியா சின்ன பின் சார்ஜர் வேணும்......!!!!!!!!!!