எங்கள் முதல்வரே !

விழிகளில் கனிவும்
விரல் நுனிகளில்
ஆளுமைத் திறமும்
இப்படி ஒரு
கல்லூரி முதல்வர்
எனச் சொன்னால்
நம்ப இயலா அளவிற்கு
வாழ்ந்து மறைந்த
எங்கள் வாழ்வின்
அறிவொளியே!

குண்டூசி
குத்துவது முதல்
கல்லூரிகளில் சென்று
மாணவர்களிடம்
பேசுவதுவரை
ஒத்திகை நடத்தி
ஒத்திகை நடத்தி
மழலைக்கு
கற்றுக் கொடுக்கும்
தாயாய்
நாங்கள் தந்தையான
காலத்திலும்
கற்றுக் கொடுத்த
எங்கள் ஆசிரியரே!

எங்கள் வளர்ச்சியின்
ஒவ்வொரு நிலையிலும்
உளமாறச் சிரித்து
ஊக்கமூட்டி
இன்னும் மென்மேலும்
முன்னேறு முன்னேறென
படி அமைத்த
பண்பாளரே!

மாணவர்களிடம் செல் !
மாணவர்களுக்குச்
சொல்வதற்காகக் கற்றுக்கொள் !
மற்றவர்களின் உயர்வே
உனது வாழ்வெனக் கொள்!
என எங்களை வழி நடத்திய
எங்கள் முதல்வரே !
வாழ்க உந்தன் புகழ் !
வா. நேரு
(திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின்
8-வது ஆண்டு நினைவு நாளை(8.3.) முன்னிட்டு)

எழுதியவர் : (8-Mar-11, 1:54 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 323

மேலே