நான் இறந்து விட்டேன்
'' நான் இறந்து விட்டேன் ''
'' ஆம் பள்ளிக்குச்சென்றேன் - என்ன
வகுப்பு என்றார்கள் அங்கே - நான் ,
சமாதியாகி விட்டேன் என்னை ,
சமாதானப்படுத்தாதே ,,//
'' ஆம் அரசுப்பணிக்கு சென்றேன் - என்ன
வெள்ளி தருவாய் என்றார்கள் அங்கே -நான் ,
சமாதியாகி விட்டேன் என்னை ,
சமாதானப்படுத்தாதே ,,//
'' ஆம் அரசியல் பணிக்குச்சென்றேன் - என்ன
கரன்சி வைத்துள்ளாய் என்றார்கள் அங்கே - நான்
சமாதியாகி விட்டேன் என்னை ,
சமாதானப்படுத்தாதே ,,//
'' ஆம் கடவுளை கானச்சென்றேன் - என்ன
மதம் என்றார்கள் அங்கே - நான்
சமாதியாகி விட்டேன் என்னை ,
சமாதானப்படுத்தாதே ,,//
'' ஆம் இப்படி பல விடயங்களில் - மனிதம்
ஆக்கப்பூர்வமானவனை அடக்கம் புனைகிறது
ஆகையால் ஆங்காங்கே இறக்கவும் ,இழக்கவும் ,
நேரிடுகிறது ..//- இதயத்தை ,,,//
சமாதியாகி விட்டேன் என்னை ,
சமாதானப்படுத்தாதே ,,//