தங்கச்சிலை

தங்கச்சிலை ஒன்று
கொண்டெழுந்தது
போல உந்தன் உருவம்....!

மனத்தட்டில் நானும்
ஏந்தி கொள்வேன்
நான், எந்த நேரம்

தழுவிடும் உறவினை
தந்தால், அன்பின் அருவியில்
குளித்திடுவேன் நாளும்

மயிலின் தோகை போல
உள்ள கூந்தலை வருடி, உன்னை
மடியினில் தாங்குவேன் நாளும்

மன்மதன் தோற்ப்பான்
உன்னை கண்டிடும் நேரம்,
மனதினில் கொள்வான் தாபம்

மங்கை உந்தன் உள்ளத்தில்
இருக்க, உயிரை பணயம்
வைப்பேனே

மழையின் சாரல்கள் தூறிட,
குடையாய் எந்தன் கைகளை
நான் மாற்றிடுவேனே

மற்றதெல்லாம் மறந்து
உன் நினைவினிலே எந்நாளும்
நான் இருந்திடுவேனே

மறுமுறை, பல முறை
உன்னை கேட்கின்றேன்,
மண்ணின் மங்கையே

மனதால், நினைவால்,
உயிராய் உன்னை நேசிக்கின்றேன்,
என்னை சேர்வாயோ?

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (11-Jun-14, 2:49 am)
சேர்த்தது : nimminimmi
Tanglish : thanga thamarai
பார்வை : 72

மேலே