சிறகை விரித்து பறப்போமா
குறிப்பு (5 வருடங்கள் புரிதல் இல்லாமல் பிரியும் காதலர்கள் இணையும்தருணம் அவர்கள் உணர்வினை கவிதையில் முதன் முறையாய் ... )
கண்களால் சொல்லி சென்றாய் காதலை
கவிதை பாடினேன் மனத்தால்
மனதின் புரிதல் வேறுபடுகையில்
பிரிவு நமக்கல்ல காதலுக்கு
உன் நினைவால் ஓடியன வாழ்க்கை
என்னை நீ நினைத்தாயோ இல்லையோ
உன்னை நினைக்காத நாள் இல்லை
நாள் தொடங்கி முடியும் உன் நினைவாய் மட்டும்
என் வாசல் தேடி வருவாய்
என்று காத்திருந்தது என் காதல்
மட்டுமல்ல நானும்தான்
அங்கே ஏமாற்ற படுவது
நான் மட்டுமல்ல என் காதலும்தான்
நான் உன்னோடு பேசாது பார்க்காது போனால்
உனக்கு வலிக்குமென்று இருந்திருந்தேன்
ஆனால் அந்த வலியின் சுவடு இல்லை உன்னிடம்
ஏனடி எனக்கு மட்டும் வலித்தது காதலா
அதற்க்கு பெயரும் ....
எந்த கடினம் வந்த போதும்
இதுவும் கடந்து போகும்
என நினைப்பவன் நான்
உன்னை நினைத்து கொண்டே
வாழ்க்கையை கடப்பவன் நான்
நேற்று முடியும் இன்று முடியும்
நமக்கான புரிதலில் பிரிதல் என
காத்திருந்த எனக்கு ...
கும்பிட போன தெய்வம்
குறுக்கே வந்ததாய் உன் காதல்
அழும் பிள்ளைக்கு பாலை ......
தாயை கண்ட குழந்தையாய்
தேடிய வார்த்தை கண்ட கவியாய்
இன்னும் சொல்லிட நிஜமாய் தெரியவில்லை
என் மனதிற்கு வார்த்தை ...
உன்னால்தான் என் வாழ்க்கை
சிறகை விரித்து பார்போம் வா
நம் காதல் வானில் ..........