பாட்டெழுத நினைக்கிறேன்

சுமை இல்லை சுமை இல்லை
காதல் அழகான சுகம் சுகம்
மனம் இல்லை மனம் இல்லை
உன்னை நீங்க தினம் தினம்
இது போல இது போல உணர்வு
எந்நாளும் வரம் வரம்

நிலையில்லா உடலுக்கு அழிவில்லா காதல்
பிரிவில்லா வாழ்க்கைக்கு துணையான தேடல்

அழகான பெண்ணே
என் அமுதான கண்ணே
படைத்தானே உன்னை
துலைத்தேனே என்னை

உடல் நடமாடும்
உயிர் உன்னை தேடும்
கண் அலைமோதும்
கவிதை மலை பொழியும்

விடியாது பொழுதும் இல்லை
மலராத மலரும் இல்லை
அழியாத உடலும் இல்லை
நீ இன்றி நானும் இல்லை

கண்ணோடு விழியாக கருவான பெண்ணே
இமையாக நான் மாறி உனை காப்பேன் கண்ணே

சுமை இல்லை சுமை இல்லை
காதல் அழகான சுகம் சுகம்
மனம் இல்லை மனம் இல்லை
உன்னை நீங்க தினம் தினம்
இது போல இது போல உணர்வு
எந்நாளும் வரம் வரம் .

எழுதியவர் : kalaiselvi (22-Jun-14, 10:30 pm)
பார்வை : 242

மேலே