அவன் இவன்

முதல் எழுத்து முதல்
முற்றுப்புள்ளி வரை
மூலக்கதைச் சொல்லி,
முதலும் முடிவும்
அவன் தான் என்பான்…
முடிவிலி தொடரின்
உருவம் கேட்டால்,
இவன் தான் அவனின்
உருவகம் என்பான்…
இவன் தேடும்
பொருள் அனைத்தும்
தனதென்று சொல்வான்…
எங்கும் எதிலும்
பரம்பொருள் என்பான்…
பிறர் செய்யும் தவறுகள்
சதி என்பான்…
இவன் செய்யும் தவறுகள்
விதி என்பான்…
படைத்தலும்,
காத்தலும்,
அழித்தலும்,
அண்டமும்,
அகிலமும்,
அவன் தொழில்,
என்பான்…
இவன் வாழ,
பலர் வாட,
பணம் தேடி
கரை சேர்வது…
இவன்,
தொழில் என்பான்…
தொழில் செய்து
பலன் தேட
அவன் மனிதன் இல்லை…
இவன் செய்யும்
தீவினைகள் தடுக்க
ஒரு கடவுள் கூட இல்லை…