கவிதை ஒன்று பரிசாக

அழகிய கவிதை
பரிசளிப்பேன் என்றாய்..

முடியுமா என்றேன்
முடியும் என தெரிந்தும்..

என் தோள் பற்றி
உன் தோள் சாய்த்தாய்..

கவிதை இதோ என்றாய்..

புன்னகை பூத்த
என் இதழ்களை காட்டி..!!

எழுதியவர் : மது (27-Jun-14, 12:25 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 82

மேலே