பணம்

பணம் பல பெயர்களில்......
காசு, துட்டு, சல்லி, பைசா ,
அதன் பெருமை செல்வமே .

பணம் இல்லை என்றால்
உலகம் மனிதனை
எப்படி அழைக்கும் ....... ,

பணத்தை சேமிக்க ,
ஓடி ஓடி உழைக்கிறோம்
ஓடாய் தேய்கின்றோம் .

ஆலாய் பறக்கின்றோம் .
அள்ளி அள்ளி சேர்க்கின்றோம் ,
பதுக்கியும் வைக்கின்றோம் .


ஏன் இப்படி/ நேர்மையாக
உழைத்துக் கொள் ,அளவுக்கு மீறி
ஆசை கொள்ளாதே..

பணம் என்றும் உன்னிடம் நிலைக்கும் ,
திருட்டும் இல்லை ,அச்சமும் இல்லை ,
தர்மம் வெல்லும் நீதி நிலைக்கும்,

உழைப்புக்கு மூலதனம் நல்ல தொழில் .
வாழ்க்கைக்கு மூலதனம் பணம் ,
தன்மானத்திற்கு மூலதனம் பண்பு .

இந்த உண்மையினை மனிதன்
உணர்ந்து வாழ்ந்திட முயன்றிடுவோம்
முயற்சி செய்திடுவோம் .











,

எழுதியவர் : பாத்திமா மலர் (28-Jun-14, 3:03 pm)
Tanglish : panam
பார்வை : 230

மேலே