மீண்டும் வானம்பாடி

மரபு வானம் உடைத்து புகுந்த
சிறகின் கானம் படைத்த சந்தம்,
உனது எனது படைத்தல் தாகம்
உயரப் பறக்க கிடைத்த சொந்தம்.....

வானம் பாடும் வானம் பாடி
கவிதை ஆச்சு, வாழ்க்கை தேடி,
கானம் தேடும் வார்த்தை கூடி
காதல் ஆச்சு, கவிதை தேடி.........

கட்டமைப்பு அப்படி, கடவுள் போல
எட்டாத தப்படி, கவிதை வேல,
என்று சொன்ன கவியரசன் பழசு
சிற்பி ஞானி புவியரசு புதுசு.......

மீண்டும் எழுதி எழுதி உடைப்போம்
புதுக் கவிதை தாண்டி படிப்போம்,
தாண்டும் வரிகளின் இடை வெளியில்
மீண்டும் வானம் பாடி சமைப்போம்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (1-Jul-14, 8:12 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 139

மேலே