மீண்டும் வானம்பாடி,

வானில் சுற்றித் திரியும் வானம்பாடிகளாய்
நீயும் நானும் - காதலெனும் வானில்...!

மண்ணுள் ஒழிந்து வேடிக்கை காட்டுகிறது
அதேசாம்பல் வானம்பாடி - என்மனதினுள்
நீ ஒழிந்து நர்த்தனம் ஆடுவதுபோல...!

சிறகடித்து உயரே பறந்தது வானம்பாடி,
நானும்கூட வானம்பாடியாய் உயரே - உந்தன்
உந்தன் கடைக்கண் பார்வை பட்டதால்...!

புயலடித்து சிறகொடிந்து வீழ்ந்தது வானம்பாடி,
எனதன்பை திருடிக்கொண்டு - நீ ஓடினாய்
எனது இதயத்தை வெற்றிடமாக்க எண்ணி...!

கால்களால் நடைபயின்றது "மீண்டும் வானம்பாடி",
எனதிதையம் உனதன்பு நினைவுகளுடன் - இன்றும்
என்றும் சிறகுவிரிக்கும் "மீண்டும் வானம்பாடியாய்"...!

வானமென அன்பும் விரிந்ததுதான் - சிறகுவிரி
"மீண்டும் வானம்படியாய்" அனைத்தும் உன்வசப்படும்...!


- ரேணு

எழுதியவர் : -ரேணு (2-Jul-14, 1:21 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 116

மேலே