கவிதைகொரு களங்கம்

கவிதைக்கொரு களங்கம்
சொன்னால், காதலை குற்றம்
சொன்னால்.....!

வலிக்குதடி நெஞ்சுக்குள்ளே
வாய் மூடி குமுறுகிறேன் உள்ளுக்குள்ளே

வஞ்சி உன்னை நான் விரும்பியது
உண்மை, ஆனால் காமம் அதில் இல்லை

மன பார்வையிலும் நான் உன்னை
பார்ப்பது அழகிய வண்ண, வண்ண
ஆடைகளுடனே

சரசங்கள் வேண்டும், விரசங்கள் வேண்டாம்
வசந்தங்கள் வேண்டும், வரைமுறைகள்
வேண்டும்

அதை மீறினால், தடை போடடி என்
கவிதைக்கே

விலை பேசினால், கலையினால் எந்தன்
காதலை, வெறுத்து ஒதுக்கிடு
என்னையே

சொல்ல வேறு வார்த்தை இல்லை
உன்னை வெல்ல உண்மை காதலை
தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (6-Jul-14, 7:49 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 79

மேலே