இல்லாது இரு
இருக்கும் போது
தெரிவதில்லை எதுவும்
இல்லாத போது
உணர்கிறோம்
இருப்பின் மகத்துவம்
எதிர்படும் நபர்கள்
கேட்கிறார்கள்
காணத நபரின்
நலனும் செயலும்
இல்லாதது குறித்துதான்
இருப்போர் எண்ணம்
இருந்துகொண்டிருக்கும்
இருப்பதாய்
பாவித்து பாவித்து
இருப்பதாய்
இருந்து கொண்டிருப்போம்
இல்லாத போதும்
பார்க்கும் முகங்கள்
கேட்கும் குரல்கள்
செய்யும் வேலை
இப்படியாய்
எல்லாவற்றிலும்
காணக் கிடைக்கிறார்கள்
இல்லாதிருப்பவர்கள்
இருப்பவர்கள்
இல்லாதவர்களாய்
ஆகிப்போதும் உண்டு
இருப்பில்
கிடைக்கும் மகத்துவம்
இல்லாது இருப்பதில்
பெரும் மகத்துவம்...