நிலவு இல்லாத இரவு

சிறகொடிந்த பின்னே
வானம்பாடிகள்
கானம் பாடுமா ?

குளிர் வந்த பின்னே
இசைக்குயில்கள்
வசந்தம் பாடுமா ?

நிலவு இல்லாத
இரவில்
அழகு இருக்குமா ?

கற்பனை இல்லாத
கவிதையில்
சுவை இருக்குமா ?

காதல் இல்லாத
வாழ்வில்
இனிமை இருக்குமா ?

உறுதியில்லாத
உள்ளம்
வழி நடக்குமா ?

வழி தெரியாத
கால்கள்
ஊர் சென்றடையுமா ?

திசை இலக்கற்ற
வாழ்வு
வாழ்கை ஆகுமா ?

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (21-Jul-14, 9:44 am)
பார்வை : 191

சிறந்த கவிதைகள்

மேலே