கண்ணாடியாவது அணிந்துகொள்

உன் இமைக்கதவுகள்
திறக்கும் பொழுதெல்லாம்
என் இதயகதவுகள்
உடைந்து போகிறது....!

என்னை மீறி இதுவரை யாரும்
என்னில் நுழைந்ததில்லை....!
நீ மட்டும் எப்படி
என் உயிரில் கலந்தாய்....!

இதுவரை யாரிடமும்
நான் பேச பயந்ததில்லை....இருந்தும்
உன் மவுனத்தின் முன் மட்டும்
என் வார்த்தைகள் மண்டி இடுகிறது....!

என்னை என்ன செய்தாய்....?
இன்னும்
என்னால் எழக்கூட முடியவில்லை....!
உன் விழிக்குழியில் விழுந்து....!


எனக்கு பல மொழிகள் தெரிந்தாலும்
உன் விழி பேசும்
மொழிகள் மட்டும் இன்னும்
எனக்கு புரியவேயில்லை....!

பெண்ணே.....
உன் வாய் திறந்து
ஏதேனும் சொல்வாயா...? இல்லை
உன் விழிப்பார்வையிலே
என்னை கொல்வாயா....?

உன் விழிகளுக்கு யார்
கற்றுக் கொடுத்தது ....
எவரையும் வீழ்த்தும் யுக்தியை.....?

பெண்ணே....
கடைசியாய் ஒன்று...
உன் கண்களில்
கண்ணாடியாவது அணிந்துகொள்....!
என்னைப்போல் யாரேனும்
உன் விழிகளால் மோதி
வீழ்ந்து விடக்கூடும்....!

எழுதியவர் : அருண்குமார்.அ (21-Jul-14, 2:53 pm)
பார்வை : 144

மேலே