பள்ளிக்கூட பாலகனே

பள்ளிக்கூட பாலகனே,
பாரை காக்கும் தலைமகனே !
புத்தகத்தை நண்பனாக்கு,
போகுமிடமெல்லாம் எடுத்துச் சென்றிடு !
எழுதுகோலை ஏவலனாக்கு,
எண்ணியதை எழுத்தாக மாற்றிடு !
கலாமின் எதிர்காலத்தை,
கைகளில் வைத்திருப்பவன் நீ !
எழுந்து வா,
எதிர்காலம் உனக்காக காத்திருக்கிறது !