பள்ளிக்கூட பாலகனே

பள்ளிக்கூட பாலகனே,
பாரை காக்கும் தலைமகனே !

புத்தகத்தை நண்பனாக்கு,
போகுமிடமெல்லாம் எடுத்துச் சென்றிடு !

எழுதுகோலை ஏவலனாக்கு,
எண்ணியதை எழுத்தாக மாற்றிடு !

கலாமின் எதிர்காலத்தை,
கைகளில் வைத்திருப்பவன் நீ !

எழுந்து வா,
எதிர்காலம் உனக்காக காத்திருக்கிறது !

எழுதியவர் : கர்ணன் (22-Jul-14, 2:35 pm)
சேர்த்தது : சிவா (கர்ணன்)
பார்வை : 495

மேலே