மனம் மலராக

உடல் அழுக்கு வெளியேற ,
வாய்கள் ஒன்பது உண்டு .

மன அழுக்கு வெளியேற ,
வழி தான் உண்டா ?
முறை தான் என்ன?

ஒன்பது வாசல்கள் வேண்டாம் ,
உயர்வான எண்ணம் ஒன்று போதும்.

நிதர்சனத்தின் நிகரென்று ,
நிம்மதியாய் வழியுண்டு .

உதவிடும் எண்ணம்,
உடன் செய்திடல் .

ஊருக்கு உழைத்திடல் ,
உண்மை பேசிடல் .

நன்மை செய்திடல் ,
தவறேதும் செய்யாதிருத்தல்.

உன் வழி இதுவென்றால் ,
உனக்கு நிகர் எவருண்டு !

மனம் மலராகும் ,
இருந்து பார் ,
வாழ்ந்து பார் ,
இழப்பது ஒன்றுமில்லை .

எழுதியவர் : arsm1952 (25-Jul-14, 11:55 am)
Tanglish : manam malaraaga
பார்வை : 263

மேலே