நானும் கவிஞன்
எண்ணங்கள் கோர்த்து எழத்தில் வடித்தால்
நீங்களும் இன்று புது கவிஞன்
ஓரடியில் நான்கு சொற்களில் புனைந்தால்
ஒண்ணே முக்கால் அடியில் வள்ளுவன்
மூணே முக்கால் அடியில் கம்பநாடன்
வீறு கொண்டு எழுந்தால் பாரதி
கனிரசம் சொட்ட வடித்தால் பாரதிதாசன்
அடி சீர் விட்டால் விடுதலை கவிதை
குற்றம் குறை கூற கூட்டமைப்பு இல்லை
சுட்டெரிக்கவும் இன்று நக்கீரனும் இல்லை
இஷ்ட்டப்படி நான் எழுதும் போதெல்லாம்
கஷ்ட்டப்படாமல் போற்றி எனை கவிஞனாக்குவீர்
எதுகையும் மோனையம் துணை நின்று
கருத்தும் வடிவமும் ஒருங்கே இணைந்து
நால்வர் பாராட்டும் பெற்றால் இங்கே
நானும் கவிஞன்! நானும் கவிஞன்!
=======================================
விடுதலை கவிதை = Free verse