இம்சை அரசன் என் HOD

வீட்டில் மனைவியுடன் வாத்தியாருக்கு யுத்தம்
அதனால் கல்லூரியில் அவருக்கு கொதிக்கும் ரத்தம்
நான் அவரிடம் சிக்குவது இறைவனின் சித்தம்
பார்த்தவுடன் கொட்டிடுவார் கோபத்தை மொத்தம்
ஊருக்கே கேட்க்கும்படி போடுவார் சத்தம்
புரியாது எனக்கு அவர் கத்துவதின் அர்த்தம்
அதனால் ஏறிவிடும் எனக்கு தலைக்குமேல் பித்தம்
வீட்டில் அன்னை அறிந்துடுவாள் என்னுடைய வருத்தம்
வாடிய என் முகத்தில் கொடுப்பாள் ஓர் முத்தம்
பின் சிறுது நேரத்தில் மனமாகிவிடும் சுத்தம் ........................


ஆசான் ராஜா

எழுதியவர் : ஆசான் ராஜா (14-Aug-14, 6:57 pm)
பார்வை : 94

மேலே