ஆகஸ்டு 15
நண்பா ...
நேற்று ஒரு நாள்...
"காந்தி வழி நடப்போம்"
பிள்ளைகளுக்கு போதித்தாயே.
-இன்று-
நணபர்களுடன்
கடைகளில் கிண்ணங்களை
உரசிக் கொண்டிருக்கிறாயே.
நண்பர்களின் பிள்ளைகளே...
ஒன்றரை மாதம்
பொறுங்கள்.
அப்பன் மறுபடியும்
போதிப்பான்.
அக்டோபர் இரண்டன்று...
- இந்த எண்ணத்துக்கு மூலகாரணம்
கிருஷ்ணதேவின் இன்றைய கவிதை.
பகிர்நதுள்ளேன் . பாருங்கள் -