மழையில் மழலை ஆனேன்
மழையில் நனைந்து ஆடும்,
மழலை ஆனேன் நானும் !
காகித கப்பல் கொண்டு,
களிப்பாக விளையாடிய நாட்கள்,
தூரலில் துள்ளிக் குதிக்கும்,
சாரலாக நினைவில் வந்தது !
கோப்பையில் தேநீர் கொண்டு,
குளிர்ந்த காற்றை இரசிக்கையில்,
துணிந்தது மழை மேகம் ,
தணிந்தது விவசாயி தாகம் !