மழையில் மழலை ஆனேன்

மழையில் நனைந்து ஆடும்,
மழலை ஆனேன் நானும் !

காகித கப்பல் கொண்டு,
களிப்பாக விளையாடிய நாட்கள்,

தூரலில் துள்ளிக் குதிக்கும்,
சாரலாக நினைவில் வந்தது !

கோப்பையில் தேநீர் கொண்டு,
குளிர்ந்த காற்றை இரசிக்கையில்,

துணிந்தது மழை மேகம் ,
தணிந்தது விவசாயி தாகம் !

எழுதியவர் : கர்ணன் (24-Aug-14, 3:57 pm)
பார்வை : 287

மேலே