தோரணை

நீ
படித்து விட்டுக் கொடுத்த
என் புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கத்திலும்
உன் வாசனைகள்
பதியப்பட்டுள்ளன...

பக்கங்களில்
முகம் சாய்த்த படி
உணர்கிறேன்
உன் மடியில் இருப்பதைப் போல...

அங்கு என் ஆசைகள்
மணற்பரப்பைப் போல நீளுகிறது
இந்த பிரபஞ்சத்தில்...

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (26-Aug-14, 6:44 pm)
சேர்த்தது : பாரதி நீரு
Tanglish : thoranai
பார்வை : 343

மேலே