தவறெனப்படும் சரி

மௌனப் பரப்புகளில்
உழவு தொடங்கியிருக்கிறது...
புருவ அசைவுகளின்
மொழிகள்.....!!

விழிகளுக்கு இதழ்களின்
வேலை.... பேசும்...!!!
இதழ்களுக்கு விழிகளின்
குணம்....... சுரப்பது....!!!

காமவியலிலும் தேற்றக்
கோட்பாடுகள்....
உதடுகள்........ கூட்டும்..
உணர்வுகள்......... பெருக்கும்..
விரல்கள்.......... வகுக்கும்..
வெட்கம்.......... கழிக்கும்....!!!


மார்புத் திசுக்களை
பிரதியெடுக்கும் மீசை உரோமமும்...
மீசைப் புழுக்களை
தேனில் அமிழ்த்தும்
மார்புப் பொதிகளுமான
கலவிகள்.... ஆசீர்வதிக்கப் பெற்றது..

வியர்வையெது.... எச்சிலெது....
வேறுபாடு தெரியவில்லை...
உளறல்கள் மட்டுமே
எதிரொலித்திருக்கும்....
இரண்டும்.... இனிக்கிறதென்று....!!!

மனம் சிரிப்பதை
உடல் அழுது செய்தி பகிரும்....
நித்திரை கொண்ட
நியூரான் வாய்களில்
எச்சிலாய் ஒழுகிக்கிடக்கும்
அட்ரீனலினும்..... ! ஆக்சிடாக்சினும்....!!


எலும்பு கரைக்கும்
சூடு பெருக்கும்....
பிசுத்த தேகம் இதமாய்
பரப்பும்...!!
ஒருதேகக் கொழுப்பில்
மறுதேகப் புரதம் கரையும்...
தாகமெடுத்த நாவிற்கு
மார்புக்குழி தடாகமாகும்.....!!!

பௌர்ணமி படமெடுப்பதை
உணர்ந்திராத.... காற்று
சுரண்டியிழுப்பதை
அறிந்திராத.... நிர்வாணத்
தெய்வீகங்கள்... பரிமாற்றம்
கழிந்தபின்னே
பொய்போர்த்திக் கொள்ளும்
ஆடைகளென்னும் பெயரிட்டு.....!!
சரியென்று மேகம்மறையும்
படம்பிடித்திருந்த பௌர்ணமியும்....!!!


காமநிலை எப்பொழுதும்
கண்டுணரும் தெய்வீகமே....!!
இருவராய் தவமேற்கையில்..
இறைப்பொழிவாய் இனிக்கும்....
கூட்டுப் பிரார்த்தனை
கூத்தாடிகளுக்கு.... தெய்வங்கள்
ஒருபோதும்... செவிசாய்ப்பதில்லை...!!!

எழுதியவர் : நல்லை.சரவணா (26-Aug-14, 6:47 pm)
பார்வை : 141

மேலே