மது கவிஞர் இரா இரவி

மது ! கவிஞர் இரா .இரவி !

குடிக்க குடிக்க
உயிர் குடிக்கும்
மது !

திரவ வடிவில் உள்ளது
திராவகத்தை விட கொடியது
மது !

இன்று மட்டும் என்று தொடங்கி
என்றும் என்றாகும்
மது !

துக்கம் மறக்க என்பாய்
துக்கத்தில் முடிக்கும்
மது !

வன்முறையின் காரணி
வம்புகளின் ஆரம்பம்
மது !

ஒழுக்கத்தின் எதிரி
ஒழுக்கக்கேட்டின் நண்பன்
மது !
.
சிற்றின்பம் என்பாய்
பெருந்துன்பம் தரும்
மது !

முதலில் கோப்பை மோதல்
பின் நண்பர்கள் மோதல்
மது !

தேசப்பிதா வெறுத்தது
பித்தனாய் ஆக்குவது
மது !

பேதைமை வளர்ப்பது
பெண் இனம் வெறுப்பது
மது !

கடமையில் தவறி
மடமையில் வீழ்த்துவது
மது !

அடிமையாக்கி
அழித்து விடும்
மது !

இலவசமாக வழங்கி நண்பன்
பகைவனாக மாறுவான்
மது !

கூடி கும்மாளமிட்டு குடித்து
சண்டையிட்டு பிரிவில் முடிக்கும்
மது !

காலம் மாறிவிட்டது என்பாய்
நீ காலமாக வழி வகுக்கும்
மது !

நாகரிகம் என்று தொடங்கி
அநாகரிகத்தில் முடிக்கும்
மது !

ஆற்றலை அழிக்கும்
அறிவை சிதைக்கும்
மது !

அறிவாளியை முட்டாளாக்கும்
முட்டாளை மூடனாக்கும்
மது !

உயிர்க்கொல்லி பானம்
உள்ளே எய்திடும் பாணம்
மது !

மதிப்பை இழப்பாய்
மதியையும் இழப்பாய்
மது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Aug-14, 10:20 pm)
பார்வை : 486

மேலே