அடேய் ,என் உயிர்கொல்லியே

உன் நிறம் மங்கி தெரிகிறாய்
அழகு நிலையம் போ என்கிறாள்
தோழி

அவளுக்கு எப்படி தெரியும்?
உன் ஒரு பார்வை குளியலில்
என் கருன்கூந்தல் கூட
சிவந்து போகும் என்று .

உன் பட்டு விரல் தீண்டலில்
என் பட்டுப்போன ஆசைகள்
தளிர் விட்டு பூக்கும் என்று.


உன் அன்பு முத்தம் ஒன்றே
என்னுள் ஆயிரம்
வர்ணம் தீட்டும் என்று.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (1-Sep-14, 10:19 am)
சேர்த்தது : தேவி ஹாசினி
பார்வை : 94

மேலே