கவியில் என்காதல் - இராஜ்குமார்

கவியில் என்காதல்
==================
நிஜங்கள் நிற்கும் நேரங்களில்
நினைவும் உன்நிழலைத் தழுவுது

ரசனை மிதக்கும் மேனிதனில்
உடையும் உன்தேகம் தேடுது

இலையில் நகரும் பனித்துளியும்
உருவில் உன்தூய்மை போற்றுது

சிலையில் மிளிரும் சிற்பமும்
கலையில் உன்னழகை தீட்டுது

விழியை மிரட்டும் பக்கமும்
வாசிப்பில் உன்நேசிப்பை மீட்டுது

விரலை விரட்டும் எழுத்தும்
கவியில் என்காதலை காட்டுது

- இராஜ்குமார்

நாள் : 6 - 11 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (17-Sep-14, 10:42 pm)
பார்வை : 111

மேலே