அம்மா, அம்மா, அம்மா, என் அம்மா
“ உன் வயிற்றில் நான் ...
“ ஒரு கொடியில் உணவாம் ...
“ இரு விழியில் உறக்கமாம்....
“ என் துடிப்பை நீ அறிவாயாம் ....
“ உன் தவிப்பை நான் உணர்ந்தேனாம்....
“ பூமியில் நான் பிறந்தவுடன்
“ தாயும், சேயும் வேறு வேறாக...
“ உன் உயிரையே என்னுடன் பங்கிட்டு,
“ ஒருயிராய் இருந்து..
“ ஈருயிராய் ஈன்ற பின்னும்...
“ கடமை தீர்ந்தென்று கை விரிக்காமல்..
“ உதிரத்தை உருக்கி உயிர்ப்பால் கொடுத்து...
“ அம்மா, அம்மா, அம்மா, என் அம்மா....
“ உனக்கு ஈடு ஈரேழு உலகிலும் இல்லையம்மா!!!