கனவுகளாய் காதல் - இராஜ்குமார்
கனவுகளாய் காதல்
===================
முழுதும் வெறுக்கும்
வலிக்கும் வார்த்தைகளை
தீயிலிட்டு தீர்த்தபின்னும்
சாம்பலில் தேடுகிறேன்
உன்முகத்தின் முகவரியை
ஏளனம் செய்த
செய்கையை மறந்து பின்
செம்மண்ணில் புதைத்தும்
வாடாத மலரை வளர்க்க
துடிக்கிறேன் அதே மண்ணில்
உரிமையில்லா ஊமை
கனவுகளாய் என்காதல்
உணர்வுகளை சிதைத்தும்
கற்பனை வரிகளை எழுதி
திரிகிறேன் காதலை நினைத்து .
- இராஜ்குமார்
நாள் : 10 - 8 - 2011