மனிதன்-அது என்ன

இரவு
கலைந்தும்
இரவு
கலையா
இரவு
இவன்
மரணத்தில்
அவன்
ஜனனம்
சாவுக்குப் பயந்து
சாப்பிடாமல் இருந்தன
வளை எலிகள் .
எல்லாப் புகழும்
வல்லூறுக்குச் சேரும்
ஏகப்பட்ட இழப்பில்
அந்த விலங்குகள்
வரலாற்றில் எழுதப்பட்டன
வாழ்ந்து மடிந்த இனம்.
ஒருகாலத்தில்
மனிதனுக்கும்
இப்படித்தான்
எழுதி வைப்பார்கள்
அருங் காட்சி சாலையில்
அவன் மாறாது இருந்தால்.

எழுதியவர் : சுசீந்திரன். (24-Sep-14, 10:53 pm)
பார்வை : 64

மேலே