செழுமை மனமும் செவியிழக்கும் - இராஜ்குமார்
செழுமை மனமும் செவியிழக்கும்
================================
இளையமனமும் ஓர் இலையைப்போல
காற்று வீசவே கை அசைக்கும்
காதல் தோற்றால் நிலையிழக்கும்
இதயத்தசை சருகாய் இற்றுப்போக
உயிர்வளி குறைந்து தீர்ந்துப்போக
மூச்சு முழுதாய் முடிந்துப்போகும்
பசுமை காலம் பறந்துப்போனால்
தனிமை அதுவே உயிர்குடிக்கும்
செழுமை மனமும் செவியிழக்கும்
- இராஜ்குமார்
நாள் : 30 - 8 - 2011