செழுமை மனமும் செவியிழக்கும் - இராஜ்குமார்

செழுமை மனமும் செவியிழக்கும்
================================

இளையமனமும் ஓர் இலையைப்போல
காற்று வீசவே கை அசைக்கும்
காதல் தோற்றால் நிலையிழக்கும்

இதயத்தசை சருகாய் இற்றுப்போக
உயிர்வளி குறைந்து தீர்ந்துப்போக
மூச்சு முழுதாய் முடிந்துப்போகும்

பசுமை காலம் பறந்துப்போனால்
தனிமை அதுவே உயிர்குடிக்கும்
செழுமை மனமும் செவியிழக்கும்

- இராஜ்குமார்

நாள் : 30 - 8 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (25-Sep-14, 11:12 am)
பார்வை : 111

மேலே