உணர்வுகளை உச்சரிக்க தேவையில்லை - இராஜ்குமார்

உணர்வுகளை உச்சரிக்க தேவையில்லை
========================================

ஒவ்வொரு வரியிலும்
வார்த்தை வலியாய்
பிரதிபலிக்க காரணம்

கண்ணில் பதிந்த
சமூக அலட்சியம்
அதோடு கைகோர்க்கும்
மனித மன அவலமும்

உணர்வுகளை
உச்சரிக்க தேவையில்லை
உணர்ந்தாலே போதும்
மனிதம் தானாய் மலரும்
மண்ணிலும் மனதிலும்

- இராஜ்குமார்

நாள் ; 10 - 12 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (13-Oct-14, 9:39 am)
பார்வை : 1045

மேலே